×

மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி..சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி!

கொரோனா வைரஸ் தமிழகத்தில் அதிக அளவில் பரவி வருகிறது. இதனை தடுக்க அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் தமிழக அரசும் இணைந்து அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறது. சாதராண மக்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவலர்கள் என அனைவருக்கும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ், சமீப காலமாக அரசியலில் இருக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் பரவி வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ பழனி கொரோனாவால் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அவர்களது குடும்பத்தினருக்கும் கொரோனா பரவியது. இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்ட
 

கொரோனா வைரஸ் தமிழகத்தில் அதிக அளவில் பரவி வருகிறது. இதனை தடுக்க அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் தமிழக அரசும் இணைந்து அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறது. சாதராண மக்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவலர்கள் என அனைவருக்கும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ், சமீப காலமாக அரசியலில் இருக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் பரவி வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ பழனி கொரோனாவால் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அவர்களது குடும்பத்தினருக்கும் கொரோனா பரவியது.

இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முறையான தடுப்பு நடவடிக்கைகள் இல்லாமல் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கியதாலும், அரசின் அறிவுறுத்தல்களை கேட்காததாலும் அன்பழகனை இழக்க நேரிட்டது என்று முதல்வர் பழனிசாமி சமீபத்தில் பேசியிருந்தார். இந்த நிலையில் திமுகவில் மற்றொரு எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஆர்.டி.அரசுக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாகவும் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.