×

டெட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டித்தேர்வா? கொதிக்கும் அண்ணாமலை

 

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கம் சார்பில், நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு தமிழக பாஜக சார்பில் ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டரில், “ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கம் சார்பில், 2013ஆம் ஆண்டு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேரடி பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு தமிழக பாஜக சார்பில் ஆதரவைத் தெரிவித்துக் கொண்டேன். ஆசிரியர் பணி நியமனம் குறித்து போலி தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக தற்போது முன்னுக்குப் பின் முரணாக நடந்து கொண்டிருக்கிறது.