×

இராஜராஜ சோழனின் பிறந்தநாளில் நமது ஆட்சியை நிறுவ உறுதியேற்போம் - அன்புமணி ராமதாஸ்

 

இராஜராஜ சோழனின் பிறந்தநாளில் நமது ஆட்சியை நிறுவ உறுதியேற்போம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குறிபிட்டுள்ளார். 

இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழனின் வீரத்தை உலகுக்கு உணர்த்திய பெரும்பள்ளி இராஜராஜ சோழனின் 1039-ஆம் #சதயவிழா இன்று கொண்டாடப்படுகிறது. கடல் கடந்து வெற்றிகளை குவித்ததன் மூலம் நம் குலப்பெருமையை உலகுக்கு உணர்த்தியவன் அவன்.