×

அம்மோனியா வாயு கசிவு- உயிரிழப்பு 14ஆக உயர்வு

 

திருவள்ளூர் கன்னிகைப்பேரில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்த சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.


திருவள்ளூர் ஆலை அம்மோனியா வாயுக் கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜார்க்கண்டை சேர்ந்த பெண் மரணமடைந்தார். அம்மோனியா வாயுக் கசிவால் இறந்த 14 பேருமே பெண்கள்; அதில் இருவருக்கு 15 வயது. மேலும் 13 பேர் 5 நாட்களுக்கும் மெலாக  வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலர் கோமா நிலையில் உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.  ஒடிசாவைச் சேர்ந்த 11 தொழிலாளர்களும், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 2 தொழிலாளர்களும் இதுவரை இச்சம்பவத்தில் பலியாகியுள்ளர்.