கனமழையில் சிக்கிய அமித்ஷா ஹெலிகாப்டர்
Aug 9, 2026, 17:17 IST
சென்னையில் காற்றுடன் கனமழை பெய்வதால் தரையிறங்க முடியாமல் வானில் 6 விமானங்கள் வட்டமடிக்கின்றனர்.
சென்னையில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 6 விமானங்கள் வானில் வட்டமடித்தனர். அந்தமான், டெல்லி, கோவா, ஐதராபாத், திருச்சி மற்றும் கொச்சி ஆகிய நகரங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த விமானங்கள் சூரைக்காற்றுடன் கூடிய மழையால் தரையிறங்க முடியாத சூழல் ஏற்பட்டது. புதுவையில் இருந்து வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஹெலிகாப்டரும் சென்னை விமான நிலையத்திற்கு வர முடியாமல் தாம்பரம் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது. மழை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் விமானங்கள் புறப்படுவதிலும், தரையிறங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.