×

திருவள்ளுவர் தினம் - அமித் ஷா தமிழில் வாழ்த்து!

 

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழில் வாழ்த்து கூறியுள்ளார். 

இது தொடர்பாக அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில், திருவள்ளுவர் தின வாழ்த்துக்கள். விவேகம் நிறைந்த கவிஞர் மற்றும் தத்துவஞானியான திருவள்ளுவர், மரபு மற்றும் மனித வாழ்வில் தெய்வீகத்தை தூண்டுவதோடு, பல யுகங்களுக்கு நீதி மற்றும் சமத்துவ சமுதாயத்தை உருவாக்கவும் தூண்டுகிறார். திருவள்ளுவர் அவர்கள் எழுதிய திருக்குறள் உலக நலனுக்கானது. இன்றைய பாரதத்தின் கலாச்சார ஞானத்தின் சான்றாகவும் இது கருதப்படுகிறது. திருக்குறள் நமக்கு வழிகாட்டும் ஒளியாக என்றும் தொடரும்.