×

‘திருமணம் ஆனதாக அவதூறு’ பவ்னிந்தர் சிங் மீது வழக்குத் தொடர அமலா பாலுக்கு அனுமதி!

திருமணம் ஆனதாக அவதூறு பரப்பிய முன்னாள் நண்பர் பவ்னிந்தர் சிங் மீது வழக்கு தொடர, நடிகை அமலா பாலுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நடிகை அமலா பால், இயக்குனர் விஜயை திருமணம் செய்து கொண்டு பின் விவாகரத்து பெற்றுக் கொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும். இதன் பின்னர், ஏ.எல். விஜய் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில், நடிகை அமலா பால் பாடகர் பவ்னிந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டார் என பரபரப்பாக பேசப்பட்டது.
 

திருமணம் ஆனதாக அவதூறு பரப்பிய முன்னாள் நண்பர் பவ்னிந்தர் சிங் மீது வழக்கு தொடர, நடிகை அமலா பாலுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நடிகை அமலா பால், இயக்குனர் விஜயை திருமணம் செய்து கொண்டு பின் விவாகரத்து பெற்றுக் கொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும். இதன் பின்னர், ஏ.எல். விஜய் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில், நடிகை அமலா பால் பாடகர் பவ்னிந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டார் என பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கு காரணம், பவ்னிந்தர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் தான்.

அமலா பால் மற்றும் பவ்னிந்தர் சிங் திருமண கோலத்தில் இருந்த புகைப்படங்களை வெளியிட்ட அவர், சிறிது நேரத்தில் அதனை நீக்கி விட்டார். இந்த நிலையில், பவ்னிந்தர் சிங்குக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர அனுமதி கோரி அமலா பால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தங்களுக்கு திருமணம் ஆனதாக கூறி புகைப்படங்களை வெளியிட்டதால் அவர் மீது சிவில் அவதூறு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இன்று அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பவ்னிந்தர் சிங் மீது வழக்கு தொடர அனுமதி அளித்தனர்.