×

மழை காரணமாக அதிமுக தஞ்சாவூர் பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு!

 

அதிமுகவின், 52வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நடைபெற இருந்த தஞ்சை மாநகர் பொதுக்கூட்டம் மழை காரணமாக 16.11.2023 அன்று  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக 52-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள், 4.11.2023 அன்று தஞ்சை மாநகரில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.