×

தீரன் சின்னமலையின் 218-ஆவது நினைவு நாள் - அதிமுக முக்கிய அறிவிப்பு

 


சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 218-ஆவது நினைவு நாளை முன்னிட்டு வருகிற 03 தேதி எடப்பாடி பழனிசாமி அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தவுள்ளதாக அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 218-ஆவது நினைவு நாளான 3.8.2023 - வியாழக் கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை, கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை அவர்களுடைய திருஉருவச் சிலைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள்மாலை அணிவித்தும், திருஉருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் அவரது படத்திற்கு மலர் தூவியும் அஞ்சலி செலுத்த உள்ளார். அதனைத் தொடர்ந்து, தலைமைக் கழகச் செயலாளர்கள் மலர் அஞ்சலி செலுத்த உள்ளனர்.