பேரூர் பட்டீஸ்வரத்தில் ஆகம விதிமீறல்- நடை சாத்திய பின்னர் உயரதிகாரி சாமி தரிசனம்
கோவை பேரூரில் அமைந்து உள்ளது பட்டீஸ்வரர் கோவில். தமிழகத்தின் மிகத் தொன்மையான மற்றும் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றாகும். கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் மாமன்னன் கரிகால சோழனால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம், அதன் வரலாற்றுச் சிறப்புக்குச் சான்றாக விளங்குகிறது. சைவ சமயத்தின் முக்கிய அடியார்களான அருணகிரிநாதர் மற்றும் கச்சப்ப முனிவர் போன்றோரால் பாடப்பட்ட பெருமை இக்கோவிலுக்கு உண்டு. இங்கு உள்ள சிற்பங்கள், கல்வெட்டுகள் மற்றும் கட்டிடக்கலை அம்சங்கள் சோழர் கால கலை நுணுக்கத்தைப் பறைசாற்றுகின்றன. இக்கோவிலின் பிரதான தெய்வங்களான பட்டீஸ்வரரும் (சிவன்) மற்றும் பச்சை நாயகி அம்மனும், பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
அண்மையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் இங்கு வந்து சாமி தரிசனம் செய்தார். மேலும், நடிகர் சூர்யா, நகைச் சுவை நடிகர் யோகி பாபு, நடிகை சினேகா போன்ற திரைப் பிரபலங்களும் இக்கோவிலின் வரலாற்றுச் சிறப்பம்சங்களை அறிந்து, பக்தி சிரத்தையுடன் இங்கு வந்து தரிசித்துச் சென்று உள்ளனர். கோவிலின் தரிசன நேரம் முடிந்து பூஜைகள் முடிந்த பிறகு கதவுகளை சாற்றி பின்னர் மறுநாள் காலை பூஜைக்கு பின்னர் கதவுகள் திறக்கப்படுவது வழக்கம்.