திமுகவை அனுசரித்தால் 'Promotion'! எதிர்த்தால் 'Suspension'-ஆ?: ஜெயக்குமார்
Jan 3, 2025, 15:01 IST
வேலூர் கிராமிய காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வரும் அன்பரசன் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு எதிராக கருத்து பதிவிடப்பட்டிருந்த கருத்து ஒன்றுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் கருத்து பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் காவலர் அன்பரசனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவிட்டார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “திமுகவை அனுசரித்தால் 'Promotion'! எதிர்த்தால் 'Suspension'-ஆ? வேலூரில் மதிவாணன் என்ற காவலர்,அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் முகநூலில் அமைச்சருடன் ஞானசேகரன் இருக்கும் ஒரு பதிவிற்கு கீழ் கமெண்டில் "மானங்கெட்ட திமுக அரசு" என பதிவிட்டுள்ளார்.