×

வெளியுறவு அமைச்சருக்கு ஓபிஎஸ் கடிதம்!!

 

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 5 மீனவர்கள் உள்ளிட்ட 12  இந்திய மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்களின்  விசைப்படகையும் இலங்கைக் கடற்படை  பறிமுதல் செய்த நிலையில், அவர்களை  யாழ்ப்பாணம் குடாநாடு பகுதியில் உள்ள மீன்பிடி இயக்குனரகத்தில்  இலங்கை கடற்படை ஒப்படைத்தது.பின்னர்  பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு 12 மீனவர்களும்  சிறையில் அடைக்கப்பட்டனர்.

 இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மற்றும் தமிழ்நாடு மீனவர்கள் 12 பேரை விடுவிக்க  நடவடிக்கை எடுக்ககோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழகமுதல்வர் ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதினார் . அதேபோல் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் 12 இந்திய மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 12 மீனவர்களை உடனடியாக விடுவிக்கக் நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இதற்கு நிரந்தர தீர்வு காண  வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.