மௌனம் கலைத்த ஆதவ் அர்ஜுனா.. பரபரப்பு பதிவு..!!
Sep 29, 2025, 11:17 IST
என் வாழ்வின் மிகப்பெரிய துக்கத்தைக் 24 மணிநேரமாக அனுபவித்து வருகிறேன் என்று தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
"பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு இந்த மரணங்கள். அந்த குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பும், வலியும் சராசரி மனிதனாகக் கடந்து செல்லும் மனநிலையில் என் மனம் இல்லை. இழப்புகளைச் சந்தித்த என் உறவுகளுக்கு ஒரு உறவாய் என் எண்ணங்களை பகிர்ந்துகொண்ட ள்ளேன்.
'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.. இறுதியில் தர்மமே வெல்லும்!' என்றார்.