×

கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம்: தோழி மரணம்

நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மாடலிங் நடிகை யாஷிகா ஆனந்த், திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், நண்பர்களுடன் கிழக்கு கடற்கரை சாலையில் காரில் வேகமாக சென்றபோது, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு பகுதியில் உள்ள சாலை தடுப்பில் மோதி கார் கவிழ்ந்ததில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்தார். அவருடன் பயணம் செய்த இரண்டு
 

நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மாடலிங் நடிகை யாஷிகா ஆனந்த், திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், நண்பர்களுடன் கிழக்கு கடற்கரை சாலையில் காரில் வேகமாக சென்றபோது, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு பகுதியில் உள்ள சாலை தடுப்பில் மோதி கார் கவிழ்ந்ததில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்தார். அவருடன் பயணம் செய்த இரண்டு பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது.

யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி(28) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் மற்றும் நணபர்கள் இரண்டு பேரையும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்துக்கான காரணம் குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.