ரூ.42 லட்சம் மோசடி- நடிகர் சூர்யா வீட்டு பணிப்பெண் கைது
Sep 23, 2025, 21:20 IST
நடிகர் சூர்யாவின் தனி உதவியாளரிடம் ரூ.42 லட்சம் மோசடி செய்ததாக எழுந்த புகாரின்பேரில், அவரது வீட்டில் பணியாற்றிய பணி பெண் கைது செய்யப்பட்டார்.
நடிகர் சூர்யாவின் தனி பாதுகாவலரிடம் ரூ.42 லட்சம் மோசடி செய்த வழக்கில் சூர்யா வீட்டில் பணியாற்றிய பெண் சுலொச்சனோ, அவரது மகன்கள் பாலாஜி, பாஸ்கர், சகோதரி விஜயலட்சுமியை மாம்பலம் போலீசார் கைது செய்தனர். ரூ.5,500 கட்டினால் மாதம் ஒரு கிராம் தங்கக்காசு தருவதாகக் கூறி பலரிடம் மோசடி செய்ததாக 4 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் நகைகள் வாங்கித் தருவதாக கூறி பல பேரிடம் ரூ.2.5 கோடி வரை மோசடி செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.