×

காலாண்டு, அரையாண்டுத் தேர்வை மீண்டும் நடத்த முயன்றால் நடவடிக்கை! – செங்கோட்டையன் எச்சரிக்கை

10ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டுத் தேர்வை மீண்டும் நடத்தி அதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்க முயற்சி மேற்கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். காலாண்டு, அரையாண்டு, வருகைப் பதிவு அடிப்படையில் மதிப்பெண் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பல பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு முறையாக நடத்தப்படவில்லை. மாணவர்களின் தேர்வு விடைத்தாள்கள் இல்லை என்று
 

10ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டுத் தேர்வை மீண்டும் நடத்தி அதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்க முயற்சி மேற்கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். காலாண்டு, அரையாண்டு, வருகைப் பதிவு அடிப்படையில் மதிப்பெண் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பல பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு முறையாக நடத்தப்படவில்லை. மாணவர்களின் தேர்வு விடைத்தாள்கள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், சில பள்ளிகள் அவசர அவசரமாக மாணவர்களை அழைத்து காலாண்டு. அரையாண்டு தேர்வை நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மாத்தூர் அரசு பள்ளியில் காலாண்டு விடைத்தாள் தொலைந்துவிட்டதாகவும் அதனால் மாணவர்களை அழைத்து தேர்வு எழுத வைத்ததாகவும் செய்திகள் வெளியானது.
இது குறித்து செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ரேங்க் கார்டில் கையெழுத்து போடவே மாணவர்கள் அழைக்கப்பட்டார்கள். தேர்வுகளை நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.