×

திருச்செந்தூரை தொடர்ந்து திருவண்ணாமலையில் ஆக்‌ஷன்..! திருவண்ணாமலை கோயில் நேர்முகத் தேர்வு ரத்து..!

 

தமிழக அறநிலை துறை அமைச்சர் ரமேஷ் பல கோயில்களுக்கும் சென்று ஆய்வு செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் கோவிலுக்கு சென்ற அவர் அங்கு பக்தர்களை சிறப்பு தரிசனத்திற்கு அழைத்து செல்வதாக கூறி பணம் வாங்கும் சிலரை கையும் களவுமாக பிடித்து அவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்தார்.

இந்நிலையில்தான் திருவண்ணாமலை கோயில் பணி தொடர்பாக திமுக ஆட்சியில் 109 பணியிடங்களுக்கு நடந்த நேர்முக தேர்வு தற்போது ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அந்த நேர்முகத் தேர்வில் பங்கேற்றவர்களிடம் லஞ்சம் பெற்று தேர்வு செய்ததாக புகார் எழுந்தது. எனவே, மீண்டும் நேர்மையாக நேர்காணல் நடத்தி பணியிடங்களை நிரப்ப அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டிருக்கிறார்.

இது குறித்து வெளியான செய்தி குறிப்பில், திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் அங்கீகரிக்கப்பட்ட 466 பணியிடங்கள் அடங்கிய ஒருங்கிணைந்த பணியாளர் பணித்தொகுதி பட்டியலில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் உள்ளிட்ட இதர பணியிடங்கள் 39 மற்றும் காவலர் பணியிடங்கள் 70 ஆக கூடுதல் 109 பணியிடங்களுக்கு விளம்பரம் செய்து நியமனம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது மேற்படி திருக்கோயிலில் அறங்காவலர் குழு பதவி காலம் முடிவுற்றுள்ளதாலும், நிர்லாக காரணங்களின் அடிப்டையில் மேற்படி திருக்கோயிலில் 109 காலிபணியிடங்களை நிரப்ப பார்வை குறிப்பின் மூலம் வழங்கப்பட்ட அனுமதி இதன் மூலம் ரத்து செய்து உத்தரவிடப்படுகிறது.