×

பொதுமுடக்கம் பற்றி வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை – காவல்துறை எச்சரிக்கை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் நான்காம் கட்ட ஊரடங்கு போடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் ஊரடங்கு நீடிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது. இதனிடையே ஊரடங்கு நீடிப்பதை பற்றி அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால் தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஊரடங்கு உத்தரவு குறித்தும் கொரோனா வைரஸ் குறித்தும் பல வதந்திகள் பரவிய
 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் நான்காம் கட்ட ஊரடங்கு போடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் ஊரடங்கு நீடிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது. இதனிடையே ஊரடங்கு நீடிப்பதை பற்றி அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால் தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே ஊரடங்கு உத்தரவு குறித்தும் கொரோனா வைரஸ் குறித்தும் பல வதந்திகள் பரவிய வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக ஊரடங்கு நீடிக்கப்பட்டு வருவதால் சேலத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அனைத்தும் முடக்கப்படும் என்று சமூக வலைதளங்களில் வதந்தி பரவியுள்ளது. இதனை அறிந்த காவல்துறை, பொதுமுடக்கம் பற்றி வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.