×

வேலைவாய்ப்பு - இந்திய விமான நிலைய ஆணையத்தில் பணியாற்ற அரிய வாய்ப்பு!!

 

தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒன்றிய அரசின் உயர் பதவிகளில் பணியாற்ற அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்திய விமான நிலைய ஆணையத்தில் அலுவலகம் ,மேற்பார்வை ,கணக்கு, நிதி, பாதுகாப்பு , சட்டம் மற்றும் பொது பிரிவுகளில் இளநிலை உதவியாளர், இளநிலை நிர்வாக அதிகாரி, மூத்த உதவியாளர் ஆகிய பதவிகளில் உள்ள 342 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இளநிலை உதவியாளர் பணிக்கு 40,000 முதல் ஒரு லட்சத்து 40 ஆயிரம் வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல சீனியர் உதவியாளர் பணிக்கு 36 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 10 ஆயிரம் வரை வரையும்,  ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு 31,000 முதல் 92 ஆயிரம் வரை சம்பளமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதி உள்ளவர்கள் செப்டம்பர் 4ஆம் தேதிக்குள் www.aai.aero என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற பணிகளுக்கு தமிழ்நாட்டில் இருந்து மிக குறைந்த அளவிலேயே விண்ணப்பிப்பதால் தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யும் நபர்களின் விகிதம் குறைவாகவே இருக்கிறது . இதை போக்கும் விதமாக நம் இளைஞர்கள் அதிக அளவில் தேர்வாக ஏதுவாக பலரும் பயன்பெறும் வகையில் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பணியிட அறிவிப்புகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.