×

நகைகளுக்காக கள்ளக்காதலியை கொலை செய்த இளைஞர்!

 

தங்க நகைகளுக்காக மூன்று குழந்தைகளின் தாய் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகேவுள்ள நார்த்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி ரவி என்பவரின் மனைவி தேன்மொழி (34), இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளது. பாகல்பட்டி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி அசோகன்(30). இருவரும் அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் பணி செய்தபோது பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவருக்குள்ளும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. 

கடந்த மாதம் 24 ம்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற தேன்மொழி, 26ம் தேதி ஐயப்பன் கரடு என்ற இடத்தில் சடலமாக மீட்கப்பட்டார், அவர் அணிந்திருந்த தங்க நகைகள் மாயமாயிருந்தது, இது தொடர்பான விசாரணையில் தேன்மொழியை திட்டமிட்டு கொலை செய்தது அசோகன் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அசோகனை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

பேபாலீசார் நடத்திய விசாரணையில் கொலையாளி அசோகனுக்கு திருமாணமாகததும், தனியார் கம்பெனியில் வேலை பாரத்த நேரம் போக சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும் அவருக்கு அதிகளவில் கடன் பிரச்னையும் இருந்துள்ளது. இதனிடையே ஏற்கனவே திருமணாகி மூன்று குழந்தைகள் உள்ள தேன்மொழியிடம் பழகிய அசோகன், அவர் அணிந்திருந்த தங்க நகைகளை அபகறிக்க திட்டமிட்டு திருணம் செய்துகொள்வதாக கூறி அழைத்துச்சென்று தூக்க மாத்திரை கலந்த குளிர்பானத்தை கொடுத்து தேன்மொழி மயங்கியதும், நகைககளை பறித்துக்கொண்டு சேலையால் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். அவரது வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.