×

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்.. மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை!

எட்டயபுரம் அருகில் நம்பிபுறம் கீழ் தெருவில் வசித்து வரும் பாலசுப்பிரமணியன் என்பவரின் மகள் காமாட்சி பிரியா (18). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் அவரது உறவினர் ஒருவரை வீட்டுக்கு தெரியாமல் காதலித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இதனை அறிந்த பெற்றோர்கள், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த பிரியா நேற்று இரவு யாருக்கும் தெரியாமல் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
 

எட்டயபுரம் அருகில் நம்பிபுறம் கீழ் தெருவில் வசித்து வரும் பாலசுப்பிரமணியன் என்பவரின் மகள் காமாட்சி பிரியா (18). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் அவரது உறவினர் ஒருவரை வீட்டுக்கு தெரியாமல் காதலித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இதனை அறிந்த பெற்றோர்கள், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

 

இதனால் மனம் உடைந்த பிரியா நேற்று இரவு யாருக்கும் தெரியாமல் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிரியா வெகு நேரம் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர், பிரியா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த எட்டயபுரம் போலீசார், பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவியின் தற்கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.