நில அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மாற்றுத்திறனாளி மீது லாரியில் இருந்து ஜல்லிக்கற்களை கொட்டி அட்டூழியம்
Jul 25, 2025, 18:16 IST
நில அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மாற்றுத்திறனாளி மீது டாரஸ் லாரியில் இருந்து ஜல்லிக்கற்களை கொட்டி அட்டூழியம் செய்த மற்றொரு தரப்பினரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகிலுள்ள கொண்ட சமூத்திரம் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான பார்த்திபன் தன் வீட்டிற்கு அருகிலுள்ள அரசு புறம்போக்கு இடத்தை கடந்த 80 ஆண்டுகளாக பராமரித்து வருகிறார். இந்த இடத்தை அதே கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன், ஜெய்சங்கர் ஆகொயோர் அபரிக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.