×

காதலியை கர்ப்பிணியாக்கிவிட்டு மற்றொரு பெண்ணுடன் திருமணம் செய்ய முயன்ற பலே இளைஞர்!

மதுரையில் காதலிப்பதாக ஏமாற்றிவிட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்த மணமகனை திருமண மண்டபத்திலேயே போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கரட்டுபட்டி கிராமத்தை சேர்ந்தவர் வைரம் (16) என்ற 10ம் வகுப்பு பள்ளி மாணவிக்கும் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த உதயகுமார் (21) என்ற இளைஞருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக வைரத்திடம் ஆசை வார்த்தை கூறிய உதயகுமார் அந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்
 

மதுரையில் காதலிப்பதாக ஏமாற்றிவிட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்த மணமகனை திருமண மண்டபத்திலேயே போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கரட்டுபட்டி கிராமத்தை சேர்ந்தவர் வைரம் (16) என்ற 10ம் வகுப்பு பள்ளி மாணவிக்கும் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த உதயகுமார் (21) என்ற இளைஞருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக வைரத்திடம் ஆசை வார்த்தை கூறிய உதயகுமார் அந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கர்ப்பம் தரித்த மாணவி உடனடியாக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு உதயகுமாரிடம் வலியுறுத்தி வந்த நிலையில் மாணவியை திருமணம் செய்ய மறுத்ததோடு, இந்த விஷயத்தில் வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டலும் விடுத்துள்ளார் உதயகுமார்.

இதனிடையே இன்று உதயகுமாருக்கும் வேறொரு பெண்ணிற்கும் திருமணம் நடைபெறவிருந்ததை அறிந்த மாணவி வைரம் இது குறித்து மதுரை சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதனையடுத்து உடனடியாக நிலக்கோட்டை சென்ற மகளிர் போலீசார் திருமண மண்டபத்திலேயே மணமகன் உதயகுமாரை மடக்கி விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.