×

 மின் கம்பியை பிடித்தபடி இளைஞர் மரணம்.. சென்னையில் பரபரப்பு.. 

 

சென்னையில் மின்கம்பியை பிடித்தபடியே இளைஞர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

சம்பவம் சென்னை ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்.  இவர் தனியார் கல்லூரி ஒன்றில்   எலக்ட்ரிஷியனாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு  மது போதையில்  வீட்டிற்கு வந்த  தினேஷ்,  மாடிக்கு தூங்கச் செல்வதாக கூறிவிட்டு தூங்கச் சென்றிருக்கிறார். ஆனால் காலையில் அவர் மாடியில் சென்று கொண்டிருந்த மின் கம்பியை பிடித்தவாறே  உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார்.   இவர்  மின் வயரை பிடித்தவாறே உயிரிழந்திருந்ததை கண்டு  அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர்  போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.  

தகவலின் பேரில்   சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  தினேஷ் போதையில் மின்கம்பியை பிடித்தாரா அல்லது தற்கொலை செய்துகொள்ள திட்டமிட்டு இவ்வாறு செய்தாரா? அல்லது  யாரேனும் கொலை செய்துவிட்டு மின் கம்பி மீது சாய்த்து வைத்து விட்டுச் சென்றார்களா என   பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர். மின் வயரை பிடித்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.