×

#JUSTIN மாநிலங்களவை துணைத் தலைவராக திருச்சி சிவா நியமனம்

 

மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, தி.மு.க.  வை சேர்ந்த திருச்சி சிவாவை துணைட்ஜ் தலைவராக நியமித்தார். ஜூலை 16-ம் தேதியில் இருந்து திருச்சி சிவா துணை தலைவராக பதவி வகிப்பார்.

 நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 18ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறவுள்ளது.  கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் முழுமையான கொரோனா கட்டுப்பாடுகளுடன் கூட்டத் தொடர் சுமூகமாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு ஜூலை 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை மாநிலங்களவை குழு தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். இதில் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ள விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. மேலும் மக்களவை மற்றும் மாநிலங்களவை கடந்த கால கூட்டத்தொடர் போல் இல்லாமல் சுமுகமாக நடத்துவதற்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை இரு அவைகளின் தலைவர்களிடத்திலும் கோருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.