×

மருத்துவ கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாள்

 

இட ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாள் என்று அறிவித்திருக்கிறது மருத்துவ கல்வி இயக்ககம்.  எம். பி. பி. எஸ்,  பிடிஎஸ் படிப்புகளுக்கு பொது கலந்தாய்வு ஆன்லைனில் நடந்தது என்று தெரிவித்துள்ளனர் மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள்.  இந்த கலந்தாய்வில் 5647 எம்பிபிஎஸ் இடங்களும்,  1389 பிடிஎஸ் இடங்களும் நிரம்பின என்றும் தெரிவித்துள்ளனர்.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு மாணவ ,மாணவிகளுக்கு இடங்களை ஒதுக்கி ஆணை வழங்கப்பட்டது.  முதல் சுற்று  கலந்தாய்வில் இடங்களை  ஒதுக்கி உத்தரவு பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு என்று கடைசி நாள் என்றும் தெரிவித்துள்ளது  இயக்ககம். 

அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான  முதல் கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்தது. இதில், 5,647 எம்.பி.பி.எஸ் மற்றும் 1,389 பி.டி.எஸ் இடங்களை மாணவர்கள் தேர்வு செய்தனர். மருத்துவ இடங்களை தேர்வு செய்த மாணவர்களில் கடந்த 30ம் தேதி முதல்  சேர்க்கை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் கல்லூரிகளில் சேருவதற்கு  இன்று கடைசி நாள் கொடுக்கப்பட்டது.  எம்.எம்.சி., ஸ்டான்லி, கே.எம்.சி, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி உள்ளிட்ட அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதேபோல், கோவை பி.எஸ்.சி. தனியார் கல்லூரியை அதிக மாணவர்கள் தேர்வு செய்து சேர்ந்துள்ளனர்.

இதையடுத்து 58 மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் விவரங்கள் மற்றும் சேராத காலி இடங்கள் குறித்த விவரங்களை மருத்துவ கல்வி இயக்ககம் சேகரிக்க இருக்கிறது.  அரசு ஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்கள் சேகரிக்கப்பட்டு 2-வது கட்ட கலந்தாய்விற்கு பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.