×

#JUSTIN தமிழகத்தில் தற்போதைக்கு புதிய கட்டுப்பாடுகள் இல்லை!!

 

தமிழகத்தில் தற்போதைக்கு புதிய கட்டுப்பாடுகள் இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில்  நேற்றைய நிலவரப்படி புதிதாக 1,063 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 64 ஆயிரத்து 131 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்  தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 20 ஆயிரத்து 931 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,026 ஆக உள்ளது. குறிப்பாக அதிகபட்சமாக சென்னையில் 497 பேருக்கும்,  செங்கல்பட்டில் 190 பேருக்கும், கோவையில் 50 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்தது. 

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்,  "தமிழகத்தில் அதிகரித்தாலும் தற்போதைக்கு புதிய கட்டுப்பாடுகள் இல்லை.  குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போது அறிகுறி இருக்கிறதா என கண்காணிக்க வேண்டும். குழந்தைகளுக்கு சளி ,காய்ச்சல் , தொண்டை எரிச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.பொதுமக்கள் அவசியம் முகக்கவசம்
அணிய வேண்டும்" என்றார். தொடர்ந்து பேசிய அவர், கொரோனா பாதிக்கப்பட்ட 92 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர் 18 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.