×

 நடிகர் போண்டா மணியிடம் ரூ.1 லட்சம் திருட்டு - ஒருவர் கைது

 

நடிகர் போண்டாமணியின் ஏடிஎம் கார்டில் இருந்து ஒரு லட்சம் திருடிய ராஜேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல காமெடி நடிகரான போண்டாமணி தனது இரண்டு சிறுநீரகமும் செயலிழந்ததன் காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  அவருக்கு நடிகர்கள் விஜய் சேதுபதி, தனுஷ், சமுத்திரகனி உள்ளிட்ட பலரும் உதவி செய்தனர்.  அத்துடன் போண்டாமணியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவரது மருத்துவ செலவிற்கான தொகையை அரசே ஏற்கும் என்று தெரிவித்தார்.  இடைத்தொடர்ந்து அதிமுக ஆதரவாளராக இயங்கி வந்த போண்டாமணிக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிதி உதவி அளித்தார்.


சிகிச்சைக்குப் பிறகு தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வரும் நடிகர் போண்டாமணியிடம் உதவி செய்வது போல் ஒருவர் நடித்து ஒரு லட்சம் ரூபாயை திருடியுள்ளார்.  நடிகர் போண்டாமணிக்கு உதவி செய்வதைப் போல பழகிய ராஜேஷ் ப்ரீத்திவ்  என்பவர் மருந்து வாங்கி வருவதாக கூறிவிட்டு போண்டாமணியின் மனைவியிடம் இருந்து ஏடிஎம் கார்டை  வாங்கி சென்றுள்ளார்.  ஆனால் சொன்னபடி மருந்து வாங்காமல்  நகை வாங்கியதாக தெரிகிறது. இது குறித்து போண்டாமணி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் ராஜேஷ் ப்ரீத்திவ்வை கைது செய்துள்ளனர்.