×

பிரிந்து சென்ற மனைவி...மூதாட்டியை கொலை செய்த ராணுவ வீரர்!!

 

மூதாட்டி ஒருவரை ராணுவ வீரர் படுகொலை செய்த சம்பவம் தேனி அருகே அரங்கேறியுள்ளது.

தேனி மாவட்டம் பூதிப்புரம் அருகே உள்ள வாழையாத்துபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணையா. இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். கண்ணையாவின் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்ததாக தெரிகிறது. ஆனால் மனைவி பிரிந்ததற்கு தனது பெரியம்மா முத்தம்மாள் தான் காரணம் என்று அவருடன் கண்ணையா  சண்டையிட்டு வந்துள்ளார்.

சம்பவத்தன்று வாழையாத்துபட்டி  உள்ள தனது மகள் ஜோதி வீட்டில் முத்தம்மாள் உணவருந்திக் கொண்டிருந்த போது,  அங்கு வந்து கண்ணையா  தகராறில் ஈடுபட்டுள்ளார்.  ஒருகட்டத்தில் தகராறு முற்றி ஆத்திரத்தில் கண்ணையா  அரிவாளால் பெரியம்மாள்  முத்தம்மாளை  சரமாரியாக வெட்டியுள்ளார்.  இதில் முத்தம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இதையடுத்து கண்ணையா அங்கிருந்து தப்பி ஓடி விட்டார் . இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழனிசெட்டிபட்டி போலீசார் முத்தம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்ததுடன் தலைமறைவாக உள்ள ராணுவ வீரர் கண்ணையாவையும் தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.