சமஸ்கிருத உறுதிமொழியேற்பு சர்ச்சை : தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கம் முதல்வருக்கு கடிதம்...
மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் காத்திருப்பார் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
மதுரை மருத்துவக் கல்லூரியில் நேற்று முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தநிகழ்ச்சியில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், கல்லூரி முதல்வர் ரத்னவேல் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். அப்போது வழக்கமாக ஏற்கப்படும் ஹிபோக்ரட்டிக் (Hippocrati உறுதிமொழிக்கு பதிலாக மாணவர்கள், சமஸ்கிருதத்தில் மகரிஷி சரக் சபத் உறுதிமொழி ஏற்றனர். இந்த விவகாரம் பெரும் பெரும் சர்ச்சையானதை அடுத்து, மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் அவர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அந்த நடவடிக்கையை எடுத்து உத்தரவிட்டிருந்தார். இந்த விவகாரம் குறித்து அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் பேரவை தலைவர் ஜோதீஷ் குமாரவேல் உள்ளிட்ட 4 பேரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து ஆட்சியர் அனீஷ்சேகர் விசாரணை நடத்தினார். இந்த நிலையில், மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் காத்திருப்பார் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டதை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதனை வலியுறுத்தி அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேசிய மருத்துவ ஆணையத்தின் சுற்றறிக்கையின்படி ‘வைட் கோட் செர்மனி, சரக் சபத் உறுதிமொழி எடுக்கப்பட்டது என்றும், தேசிய மருத்துவ ஆணைய சுற்றறிக்கை குறித்து அறிவுறுத்தல் எதுவும் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சரக் சபத் போன்றவை குறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர்கள், மருத்துவர்களுக்கு மாறுபட்ட கருத்து உள்ளது எனக் குறிப்பிட்டுள்ள அவர்கள், மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் சரக் சபத் உறுதிமொழி ஆங்கிலத்தில்தான் எடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.