×

மதுரையில் ‘கல்விக்கடன் திருவிழா’ - மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..

 

 மதுரை மாவட்டத்தில்  நாளைய தினம் நடைபெறவுள்ள  “கல்விக்கடன் திருவிழா”ல்  மாணவர், மாணவியர்கள்  பங்கேற்று பயன்பெற்றுக் கொள்ளுமாறு  மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து ட்விட்டரில்  பதிவிட்டுள்ள  மதுரை எம்.பி. சு. வெங்கடேசன், செய்திக்குறிப்பை பகிர்ந்துள்ளார். அதில்,   “மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வருகின்ற 13.11.2022 (ஞாயிற்றுக்கிழமை)-அன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி ஒருங்கிணைப்பில் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட அளவிலான சிறப்பு கல்வி கடன் முகாம் - 2022 நடைபெறவுள்ளது.

இம்முகாமில், மாணவ, மாணவியர்களுக்கு மருத்துவம், பொறியியல், இதர தொழில் படிப்புகள், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட மற்றும் பிற படிப்புகளுக்காக, வங்கிகளில் கல்விக்கடன் பெறுவது தொடர்பாக தங்களுக்கு தேவையான தகவல்கள், வழிமுறைகள் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கங்கள் வழங்க ஏதுவாக, அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார்துறை வங்கிகள் பங்கேற்க உள்ளன.

இந்த முகாமில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர்கள் https://forms.gle/gtyfYQzXewF1orLT6 என்ற ஆன்லைன் விரித்தாள் எடிட்டர் இணைப்பு (Google Sheet Link) மூலமாகவும், கீழ்காணும் QR CODE SCAN குறியீடு மூலமாகவும் தங்களது சுய விவரங்களை பதிவு செய்திடலாம். இம்முகாமில் மாணவ மாணவியர்கள் அதிகளவில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.”