×

பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் தீவிர விசாரணை!!

 

உசிலம்பட்டி பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேக்கிலார்பட்டியை சேர்ந்தவர் பாண்டி . இவருக்கு ஜெகதீஷ் என்ற ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார் . ஜெகதீஷ் அதே ஊரில் உள்ள அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளியில் படித்து வந்துள்ளார்.  இந்த சூழலில் பள்ளி முடிந்து நேற்று வீட்டிற்கு வந்த ஜெகதீஷ் வீட்டை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.  நீண்ட நேரம் ஜெகதீஷ் கதவை  திறக்காததால்,  கதவை உடைத்து பார்த்தபோது அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து ஜெகதீஷ் குடும்பத்தினர் உசிலம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்,  தற்கொலை செய்துகொண்ட மாணவர் ஜெகதீஸ் உடலை மீட்டனர்.  இதையடுத்து உடல் பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  ஜெகதீஷ் தற்கொலை விவகாரம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  விசாரணைக்கு பிறகே   தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என்று சொல்லப்படுகிறது.  இருப்பினும் ஒன்பதாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.