×

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவறையற்ற வேலைநிறுத்தம்..

 


சிறைபிடிக்கப்பட்ட தமிழக  மீனவர்களை விடுவிக்கக்கோரி  ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து  நேற்று  3,500 கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுகுச் சென்றனர்.  நள்ளிரவில் கச்சத்தீவு நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர்,  மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.  அத்துடன்  15 மீனவர்களை சிறைபிடித்துச் சென்ற அவர்கள், தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அவர்களை அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில்  இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 15 மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர். மீனவர்கள்  கைது நடவடிக்கையை கண்டித்து  நேற்று  ராமேஸ்வரம் துறைமுகத்தில் நடந்த மீனவர் சங்க கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், விசைப்படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல்  கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் கைதை கண்டித்து தங்கச்சிமடம் மீனவர்கள் நாளை முதல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.