×

பாஜகவினரின் தலையை எடுப்பேன், விரலை வெட்டுவேன் என பேசியவர் மீது நடவடிக்கை இல்லை- பொன்.ராதா

 

நாகர்கோவில்  எஸ்எம்ஆர்வி மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள நியாய விலை கடையில் அனுமதியின்றி பிரதமர் மோடியின் படத்தை வைத்ததாக பாஜக கவுன்சிலர் சுனில் அரசு உட்பட 3 பேர் மீது வடசேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

நாகர்கோவில் வடசேரி எஸ்எம்ஆர்வி மேல்நிலைப் பள்ளி அருகில் ஊட்டுவாழ் மடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்படும் நியாய விலை கடை உள்ளது. இந்த கடையில் பாஜக கவுன்சிலர் சுனில் அரசு மற்றும் இரண்டு பேர் கடைக்குள் அனுமதி என்று புகுந்து கடையினுள் பிரதமர் மோடியின் படத்தை சுவரில் மாட்டி சென்றதாக நியாய விலைக் கடை ஊழியர் வேல்விழி நாகர்கோவில் வடசேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பெயரில் வடசேரி காவல்துறையினர் பாஜக கவுன்சிலர் சுனில் அரசு உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.