×

காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை - திண்டிவனத்தில் சோகம்  

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சேடன்குட்டை தெருவை சேர்ந்தவர் முருகன்.  காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த இவருக்கு இரண்டு மனைவிகள்.  முதல் மனைவி ராணிக்கு  ஒரு மகன்,  ஒரு மகள் உள்ளனர்.  அத்துடன் இரண்டாவது மனைவி மேகலாவுக்கு 16 வயதில் மகன் ஒருவர் உள்ளார். 

இந்நிலையில் உதவி ஆய்வாளர் முருகன் தியாகதுருகம் காவல் நிலையத்தில் கடந்த ஓராண்டாக பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு இவரது தாயார் உயர்ந்துள்ளார்.  முருகனுடன் பணிபுரிந்தவர்களுக்கு பதவி உயர்வு கிடைத்த நிலையில், அவருக்கு சம்பள உயர்வு கூட கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.  இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய  பிறகு மாடியில் உள்ள அறையில்  மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முருகனின் உடலை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  காவல் ஆய்வாளர் முருகன் பணி சுமை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்பம் பிரச்சனையா என்று கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.