நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி
Jan 25, 2023, 08:35 IST
திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பேச்சாளரும், இலக்கியவாதியுமான நாஞ்சில் சம்பத் உடல் நலக்குறைவால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் ஆசாரி பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் தற்போது நலமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.