×

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த நாகாலாந்து அரசு!!

 

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு  நாகாலாந்து முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார்.

 நாகாலாந்திலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக வேலூர் மற்றும் இராணிப்பேட்டையில் உள்ள சி எம்சி, மருத்துவமனைகளுக்கு வரும் நாகாலாந்தைச் சேர்ந்தவர்கள் தங்கும் வகையில் விருந்தினர் இல்லம் அமைப்பதற்காக இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், ராபாக்கம் கிராமத்தில் 10,000 சதுர அடி நிலத்தினை நாகாலாந்து அரசுக்கு இலவசமாக வழங்கியதற்கு நன்றி தெரிவித்து  நாகாலாந்து முதலமைச்சர் நிஃபியு ரியோ,  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

மேலும், இது மருத்துவ வசதி பெறுவதற்காக வேலூர் மற்றும் இராணிப்பேட்டை சி.எம்.சி மருத்துவமனைகளுக்கு வரும் நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.