முத்தரசனுக்கு நுரையீரலில் தொற்று உறுதி!!
Updated: Oct 25, 2022, 11:39 IST
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனுக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சளி மற்றும் இருமல் தொல்லை இருந்தது. இதன் காரணமாக அவருக்கு மருத்துவ பரிசோதனை கொண்டதில் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து முத்தரசன் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனுக்கு நுரையீரலில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.