×

பாஜக ஒரு சைத்தான்; எந்த அவதாரம் எடுத்து வந்தாலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது: சேகர்பாபு

 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் மற்றும் இதர பணிகள் குறித்த  சீராய்வுக் கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலை துறை ஆணையர் மற்றும் இணையானர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “திமுக பொறுப்பேற்ற பிறகு மாதந்தோறும் இந்து சமய அறநிலைத்துறை  செயலாளர் தலைமை மற்றும் ஆணையர் தலைமையில் 15 வது  சீராய்வு கூட்டம் நடைபெறும் வருகிறது. 2022 ஆண்டு 112 அறிவிப்புகளில் அதில் உள்ள 3761 பணிகள் குறித்தும்  மேலும் 2022- 23 ஆம் ஆண்டுக்கு அறிவிக்கப்பட்ட குறிப்புகள் குறித்தும், இரு கோடி ரூபாய்க்கு மேல் இடம் பெற்றிருந்த 112 அறிவிப்புகள் டெண்டர்கள் அறிவிக்கப்பட்டு பணிக்கான உத்தரவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 22-23 ஆண்டுகளுக்கான அறிவிப்புகளும் பணி நடைபெறுகிறது, அதில் 3200 கோடி ரூபாய்க்கு இந்த 2 ஆண்டுகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்து சமய அறநிலைத்துறை வரலாற்று இவ்வளவு பணிகள் மேற்கொண்ட காலம் தமிழக முதலமைச்சர் தளபதியின் அமைந்திருக்கக்கூடிய இந்த காலத்தில் தான் இன்றைய கூட்டத்தில், கூடுதலாக மருத்துவமனைகள், அன்னதானம் மற்றும் ஏற்கனவே செயல்பட்டுக் வந்திருக்கக்கூடிய ஒரு வேளை அண்ணனை தனம் குறித்தும் பேசப்பட்டது. சபரிமலை யாத்திரை 24 மணி நேரமும் தகவல் மையம் ஏற்படுத்தி சபரிமலையிலே திருக்குறள் சார்பில் அரசு அதிகாரிகளை இந்து சமய அறநிலைத்துறை நியமித்து தமிழ்நாட்டில் வரக்கூடிய பக்தர்களுக்கு உதவி தருவதற்கான திட்டங்கள் குறித்து பேசப்பட்டது. திருவண்ணாமலை தீபத்திற்கு 30  லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்தேன் அதற்கான ஏற்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 2 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலை தீபத்தற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது , 16 தற்காலி பேருந்து முனையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 400 தூய்மை பணியாளர்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 3739.40 கோடி ரூபாய் மதிப்பில் ஆக்கிரமிப்பு சொத்துகளை மீட்கப்பட்டு உள்ளது. 254 கோடி ரூபாய் நிலுவை வாடகை வசூல் செய்யப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலைதுறை சார்பில் இதுவரை 87ஆயிரம் ரூபாய் மரகன்றுகள் நடப்பட்டுள்ளது. அதில் மீதமுள்ள 13,000 மரக்கன்றுகள் விரைவில் நடப்படும் நடப்படும். நிலங்களை மீட்கப்பட்டுள்ளது, நகைகள் மீட்டு உருக்கபட்டுள்ளது என்று வாய் வார்த்தையாக சொல்ல கூடாது, ஆதாரத்தை வெளியிட வேண்டும் என பாஜக மாநில துணை தலைவர் வி. பி. துரைசாமி ? கூறுகிறார். தூங்குபவர்களை எழுப்பலாம் தூங்குவது போல், நடிப்பவர்களை எழுப்ப முடியாது, இதுபோல தேவையில்லாத கேள்விகளுக்கு பதில் சொல்லி எங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை , இந்து சமய அறநிலை துறை சார்பில் மீட்கப்பட்டுள்ள நகைகள் பொருட்கள் அனைத்திற்கும் முதலாம் பாகம் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை இன்று தபாலிலோ அல்லது துறை சார்ந்த அதிகாரிகள் மூலம் அவரது இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

மத்திய அரசு எந்த நிகழ்வு நடத்தினாலும் அவர்களிடம் இருந்து அழைப்பு வந்தால் அதற்கான முழு பணிகளையும் நாங்கள் சிறப்பாக செய்து கொடுப்போம், இந்து சமய அறநிலையத் துறைக்கு காசி சங்கமம் குறித்த நிகழ்விற்கு அழைப்பு வரவில்லை, வந்தால் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளோம். திருகோயில்கள் VIP தரிசனம் என்பது இந்த ஆட்சியில் உருவாக்கியது அல்ல, நாளடைவில் vip தரிசனம் முடக்கப்படும், பெரிய கோவில்களில் vip தரிசனம் மற்றும், கட்டணம் செலுத்தி தரிசனம் செய்யும் முறையை அந்தந்த கோவில்களில் வருமானம் பொறுத்து படிப்படியாக குறைத்து கொள்ளப்படும். கோவில்களில் உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற நிலையை களையும் வகையில் பல்வேறு கோவில்களில் வி.ஐ.பி தரிசனத்தை முழுமையாக தடை செய்வற்க்கான முயற்சியில் இந்து சமய அறநிலையத்துறை  ஈடுபட்டு வருகிறது.

பாஜக ஒரு சைத்தான், இந்த ஆட்சியில் சைத்தான்களுக்கு இடமில்லை, தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின்  எப்படிப்பட்ட பேய்களையும் விரட்டக் கூடிய சக்தி படைத்தவர். அதனால் பாஜக எந்த அவதாரம் எடுத்து வந்தாலும் தமிழகத்தில் நிச்சயமாக கால் ஊன்ற முடியாது” எனக் கூறினார்.