×

இந்திய துறைமுகங்கள் மசோதா மாநில உரிமைகளை பாதிக்கிறது- பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

 

இந்திய துறைமுகங்கள் மசோதா 2022 மாநில உரிமைகளை பாதிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

அந்தக் கடிதத்தில், “ இந்திய துறைமுகங்கள் மசோதா 2022 , கடலோர மாநிலங்களின் உரிமைகளைப் பாதிப்பதாகவும் , சிறு துறைமுகங்களின் எதிர்கால வளர்ச்சியைத் தடுப்பதாகவும் அமையும் என்பதால் , மாநில அரசுகளின் உரிமைகளை பாதிக்கக்கூடிய வகையில் இந்த வரைவுச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள பிரிவுகளை அகற்றிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.