×

பக்கத்து வீட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை - செல்போனில் படமெடுத்து மிரட்டல்

 

 

மதுக்கரையை சேர்ந்த பால்ராஜ் டிப்பர் லாரி ஓட்டுநர். பால்ராஜ் குடியிருக்கும் வீட்டின் பக்கத்து வீட்டாருடன் நட்பாக பேசி பழகி குடும்ப நண்பர்களாக மாறியிருக்கின்றனர். வீட்டிற்கும் அடிக்கடி ஓட்டுநர் பால்ராஜ் வந்து சென்ற நிலையில் 9 வகுப்பு படிக்கும் சிறுமியுடன் நைசாக பேசியிருக்கின்றான். 

இந்த நிலையில் சிறுமியின் தாய் தந்தை வீட்டில் இல்லாத நாளன்று பால்ராஜ் சிறுமிக்கு சீண்டல் விடுத்திருக்கின்றான் . சிறுமியை பலாத்காரம் செய்தது மட்டுமேயின்றி சிறுமியை பால்ராஜ் நிர்வாணமாக படமெடுத்தும் வைத்திருக்கின்றான். வெளியில் சொன்னால் ஃபோட்டோவை வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியிருக்கின்றான். அத்தோடு இல்லாமல் செல்போன் புகைபடத்தை காட்டி  அவ்வப்போது சிறுமியை பலாத்காரம் செய்திருக்கின்றான். 

இந்த நிலையில் சிறுமியின் வீட்டிற்கு பால்ராஜ் வழக்கம்போல சென்றிருக்கின்றான். சிறுமியின் தாயார் வீட்டில் இருந்ததனை கவனிக்காத பால்ராஜ் சிறுமியை அழைத்திருக்கின்றான். இதனை சிறுமியின் தாயார் பார்த்தவுடன் பம்பிய பால்ராஜ் புறப்பட்டான். டிப்பர் லாரி ஓட்டுநர் பால்ராஜின் நடத்தையில் சிறுமியின் பதட்டத்தில் சிறுமியின் தாயார் சந்தேகம் அடைந்திருக்கின்றார். பிறகு சிறுமியிடம் விசாரித்ததில் பால்ராஜின் பாலியல் சீண்டல் அத்துமீறல் அம்பலமானது. இதனையடுத்து மதுக்கரை போலீசில் சிறுமியின் தாயார் தந்திருந்த புகாரின் அடிப்படையில் பால்ராஜ் போக்ஸோவில் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.