×

தங்கம் விலை சவரனுக்கு ரூ.856 அதிகரிப்பு - இல்லத்தரசிகள் அதிர்ச்சி

 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 856 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 38,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

தமிழகத்தில் நேற்று முன்தினம் 22 காரட் ஆபரண தங்கம் 1 கிராம் 4,683 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஆபரண தங்கம் 37 ஆயிரத்து 464 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் வெள்ளி 1 கிராம் வெள்ளி 65.30 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை  கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 4,678 ரூபாய்க்கும், ஒரு சவரண் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 37 ஆயிரத்து 424 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 20 காசு குறைந்து, 65.10 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில் மாதத்தின் முதல் நாளான இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 107 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ஆபரண தங்க  4,785 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 856 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 38,280 ரூபாய்க்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு 100ரூபாய் குறைந்து, கிலோ 65,000 ரூபாய்க்கு விறப்னை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 65 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 856 ரூபாய் அதிகரித்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.