×

கள்ளக்குறிச்சி அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் பெண் சார் ஆட்சியர் உயிரிழப்பு..

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில்   பெண் சார் ஆட்சியர் ராஜாமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 5 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.  

 சங்கராபுரத்தில்  கள்ளகுறிச்சி மாவட்ட சார் ஆட்சியர்  ராஜாமணி உள்பட 6 பேர் காரில் சென்றுள்ளனர். அப்போது  மயிலம்பாறை அருகே  சென்றுகொண்டிருந்த போது திடீரென எதிர்பாராத விதமாக  காரின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் பெண் சார் ஆட்சியர் ராஜாமணி பரிதாபமாக உயிரிழந்தார்.  டயர் வெடித்த விபத்தில் காரில் பயணம் செய்த மற்ற 5 பேரும்  படுகாயம் அடைந்தனர் .  

அவர்கள் 5 பேரையும் அப்பகுதி மக்கள் மீட்டு  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.  கார் டயர் வெடித்து விபத்தில் சார் ஆட்சியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.