×

அரசு கல்லூரிகளில் சேர அவகாசம் நீட்டிப்பு - அமைச்சர் பொன்முடி தகவல்!!

 

பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணபிக்க கால அவகாசம் ஜூலை 17ஆம் தேதி வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகு 5 நாட்கள் வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், அரசு பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கான ரூ.1000 உதவித்தொகை திட்டத்திற்கு இதுவரை இரண்டு லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் அரசு கலைக் கல்லூரிகளில் சேர 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்" என்றார்.  163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க நேற்று அவகாசம் முடிந்த நிலையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.