மகாகவி பாரதியாரின் புகழையும், வீரத்தையும் போற்றி வணங்குகிறேன் - எடப்பாடி பழனிசாமி
Dec 11, 2022, 11:30 IST
முண்டாசுக் கவிஞர் மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் புகழையும் வீரத்தையும் போற்றி வணங்குகிறேன் என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
மகாகவி பாரதியாரின் 141வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்தநாளையொட்டி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதேபோல் தமிழ்நாடு அரசின் சார்பில், மகாகவி பாரதியார் அவர்களின் 141 - வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை காமராஜர் சாலை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு மேயர் பிரியா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதேபோல், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.