×

உச்சநீதிமன்றத்தை நாடும் ஓபிஎஸ்; எடப்பாடி கேவியட் மனுதாக்கல்

 

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ள நிலையில் எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தனி நீதிபதி வழங்கியுள்ள தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ள நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நாளை மேல்முறையீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இதில் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக் கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.