×

"புதிய மருத்துவக் கல்லூரி தொடங்கியதில் முறைக்கேடு" - சி.விஜயபாஸ்கர் மீது வழக்குபதிவு!!

 

புதிய மருத்துவக் கல்லூரி தொடங்கியதில் முறைக்கேடு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. 

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் 5 , சேலத்தில்  3 , மதுரை, தேனி ,திருவள்ளூர், தாம்பரத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அதிமுக ஆட்சியில் சி.விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது புதிய மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர்  மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  தேசிய மருத்துவ குழுமத்தின் விதிமுறைகளுக்கு முரணாக ஊத்துக்கோட்டை வேல்ஸ் மருத்துவமனைக்கு சான்று வழங்கிய புகாரில் சி.விஜயபாஸ்கர் மீது எஃப்ஐஆர் பதியப்பட்டுள்ளது.சி.விஜயபாஸ்கர், ஐசரி கணேஷ் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக லஞ்சஒழிப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்