×

 அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பார்வையிட்ட அரவிந்த் கெஜ்ரிவால்.. கடைசியாக என்ன சொல்லியிருக்கார் தெரியுமா??..

 

புதுமைப்பெண் திட்ட தொடக்க விழாவிற்காக தமிழகம் வந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்,  அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பார்வையிட்டார்.  

 உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/-   உதவித் தொகை வழங்கும் ‘புதுமைப் பெண்’திட்ட தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க  தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்னை வந்திருந்தார்.  இந்த நிகழ்ச்சியையடுத்து தமிழக முதல்வருடன்  சென்னை, கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு சென்று பார்வையிட்டார்.  அண்ணா நூற்றாண்டு நூலகம் 8 ஏக்கர் நிலப்பரப்பில் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 8 தளங்களைக் கொண்டு பிரம்மாண்டமாக  அமைதுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய நூலகமான இந்த நூலகத்தில் 6.2 இலட்சம் நூல்கள் உள்ளன. இந்த நூலகத்தின் ஒவ்வொரு தளமும் தனிச் சிறப்புடன் விளங்குகிறது.

அந்தவகையில் , முதல் தளத்தில் உள்ள குழந்தைகள் பிரிவில் குழந்தைகளுக்கான நிகழ்வாக முனைவர் வேலு சரவணன் அவர்கள் வழங்கிய “கடல் பூதம்” நிகழ்ச்சியை முதலமைச்சர்கள் இருவரும் பார்வையிட்னர்.  தொடர்ந்து 6வது தளத்தில் உள்ள பொறியியல், வேளாண்மை பாடப்பிரிவு, 7வது தளத்தில் உள்ள ஓலைச் சுவடி பிரிவு ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.  மேலும், நூலகத்தின் 8ம்  தளத்தில்  மாதிரிப் பள்ளிகள் மற்றும் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விளக்கப்பட்டது.   மேலும், மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலகம் மற்றும் இல்லம் தேடிக் கல்வி திட்டம் குறித்த குறும்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.

அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு  மாவட்டங்களிலுள்ள மாதிரிப் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய அரவிந்த் கெஜ்ரிவால்,  அவர்களுக்கு  பரிசுகள் வழங்கினார். பின்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , டெல்லி முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லம் தேடிக் கல்வி திட்டம் குறித்த புகைப்பட விளக்கப் புத்தகத்தை (Coffee Table Book)வழங்கினார்.  கடைசியாக  அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பார்வையிட்ட பிறகு  தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் , நூலகத்தின் வருகைப் பதிவேட்டில், "It's a pleasure to visit this library. Such huge collection of books and manuscripts SO well managed and kept. It's not just Tamil Nadu's pride but India's pride. Keep it up." என்று தனது கருத்தினை எழுதி கையெழுத்திட்டார்.