×

ஊர் திரும்ப வசதியாக கூடுதல் பேருந்துகள் இயக்கம்!!

 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊர் திரும்ப வசதியாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகையை ஒட்டி ஆண்டுதோறும் சென்னையில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு கடந்த 12ஆம் தேதி முதல்  14ஆம் தேதி வரையிலும்,  பயணிகள் மீண்டும் ஊர் திரும்ப வருகிற 18-ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரையிலும் சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு திட்டமிட்டது. இதன் காரணமாக பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல மூன்று நாட்களுக்கு 16 ஆயிரத்து 932 பேருந்துகள் இயக்கப்பட்டன.   கோயம்பேடு, கேகே நகர், மாதவரம் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், இந்த 6 பேருந்து நிறுத்தங்களுக்கு செல்ல 340 இணைப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்ற பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களுக்கு திரும்ப நேற்றிலிருந்து வருகிற 18-ஆம் தேதி வரை 15,599 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.  சென்னைக்கு தினசரி இயங்கும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 4,334 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.