×

அதிமுகவில் சசிகலா... ஓபிஎஸ், ஈபிஎஸ் அவரச ஆலோசனை!!

 

சசிகலா இணைப்பு குறித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவி ஆட்சி அதிகாரத்தை இழந்தது. உள்ளாட்சி தேர்தல் , நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி காரணமாக சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என ஒரு தரப்பினர் வலியுறுத்தி தொடங்கிவிட்டனர். ஆனால் மற்றொரு தரப்பும் சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என்று உறுதியாக மறுத்து வருகின்றனர். இதனிடையே ஓபிஎஸ் சகோதரர் ராஜா சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த காரணத்தினால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். 

இதையடுத்து சசிகலா இரண்டு நாள் பயணமாக தென் மாவட்டங்களுக்கு சென்று வந்த நிலையில் தொண்டர்களின் எண்ணங்களை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்று உறுதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இம்மாத இறுதியில் கட்சியின் பொதுக்குழு செயற்குழு கூட்டத்தை கூட்டுவது தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இம்மாத இறுதியில் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்டுவது தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தின் முடிவில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.